Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, May 3, 2014

ஊக்கம்



20.4.14 "தினத்தந்தி" குடும்ப மலர் இதழில் வெளியானது




Saturday, April 13, 2013

இதுவும் அதைப் போலத்தான்!


7.8.1988 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை 


Friday, May 11, 2012

வேடிக்கையான வறுமை

(குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும் )




மே 2012 மங்கை" சிறப்பிதழில் வெளியானது

Wednesday, March 14, 2012

இணைந்த ஜோடி

(கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்)






 (4-9-1997 "சாவி" இதழில் வெளியான சிறுகதை - இது "வலி" என்ற தலைப்பில் விஜயசேகர் என்ற இயக்குனரால் குறும்படமாக எடுக்கப்பட்டது)

Friday, October 14, 2011

காப்பி பேஸ்ட் கதை

குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்.



(மேலே உள்ளது நான் எழுதி "சிறுகதை கதிர்" 16-31 ஜனவரி "94 இதழில் பிரசுரமான சிறுகதை


_____________________________________________________________________________________

(கீழே உள்ளது இதே கதையை போளூர் சி.ரகுபதி வரிக்கு வரி அப்படியே எழுதி இந்த வார குமுதத்தில் 19.10.11-இதழில் வெளியாகியுள்ள சிறுகதை)

















Thursday, April 21, 2011

புதுச் செருப்பு



'வாசலில் செருப்பு பத்திரமாக இருக்குமா?'
அதே நினைவோடு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான் சேகர். அவன் கண்கள் மணவறையை பார்த்துக்கொண்டிருந்தனவே தவிர நடந்துகொண்டிருந்த சடங்குகளிலோ,ஹோமத்தை வலம் வந்துகொண்டிருந்த மணமக்கள் மீதோ அவன் கவனம் இல்லை.
புத்தம் புது செருப்பே அவனது சிந்தனையை முழுதும் ஆக்ரமித்திருந்தது.
தாம்பூலப் பைகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா? எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று வாசலைப் பார்த்தான். இன்னும் இல்லை.
நீட்டப்பட்ட தாம்பாளத்திலிருந்து அவன் கை அனிச்சையாக அட்சதையை எடுத்தது.
'கெட்டி மேளம்...கெட்டி மேளம்' என்று குரல் வரவே வாசல்பக்கம் விழி வைத்தபடி அட்சதையை வீசினான்.
அப்பா... புறப்படலாம் என்னும்போது ஒருவர் அப்படியே வழி மறித்து சாப்பாட்டிற்கு அனுப்பினார். நழுவ முடியாமல் சாப்பிடச் சென்றான்.
இலையில் என்ன பரிமாறப்பட்டது என்கிற உணர்வேயின்றி புதுச் செருப்பு நினைவாகவே சாப்பிட்டு முடித்தான்.
அவசர அவசரமாக தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
'புதுச் செருப்பைக் காணோம்!'
'ச்...சீ...பயந்தது போலவே நடந்துவிட்டதே! அதற்குள்ளாக செருப்பை மாட்டிக்கொண்டு போய்விட்டானே!'
ஏமாற்றத்தோடு தான் விட்டுச் சென்ற தன்னுடைய பழைய செருப்பையே மாட்டிக்கொண்டு வெளியேறினான் சேகர்.







(தமிழ் அரசி 5 .7.92 இதழில் வெளியான என் சிறுகதை)

Thursday, December 30, 2010

பிரேமாவை விடவா பிஸிக்ஸ்?



"மச்சி, மைனாவைப் பார்த்தியா?"

"எந்த மைனா?"

"அதாம்மா...பஸ் ஸ்டாண்டிலே சுத்திச் சுத்தி வந்து நீ டாவடிச்சுட்டிருப்பியே பிரேமா."

"பிரேமாவா...எங்கே இருக்கா?"

"நம்ம காலேஜ்லேதான் சேர்ந்திருக்கா, பி.எஸ்.சி கெமிஸ்ட்ரியிலே."

"அடடா, இன்னைக்குக் காலையிலேதாண்டா பீஸ் கட்டி பிஸிக்ஸ் க்ரூப்லே சேர்ந்தேன். தெரிஞ்சிருந்தா கெமிஸ்ட்ரியிலே சேர்ந்திருப்பேனே.என்னோட மார்க்குக்கு அந்த க்ரூப் சுலபமாக் கெடச்சிருக்குமே?"

"ஏண்டா பிஸிக்ஸ்லே இடங்கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்! நீ என்னமோ சலிச்சுக்கறியே?"

"பிரேமாவைவிட பிஸிக்ஸ் பாடமாடா முக்கியம், புண்ணாக்கு? இப்ப என்ன செய்வேன்? ஐயோ ... மூணு வருஷம் அவளோட சேர்ந்து படிச்சா ஒரு லெவல் பண்ணிடலாமே!"-- புலம்பினான் வசந்த்.

அப்போது, பிரேமா தோழியர் புடைசூழ கெமிஸ்ட்ரி சோதனைக்கூடத்துக்கு செல்வதைப் பார்த்த வசந்த் தவித்தான்.

இரவெல்லாம் உறங்கவேயில்லை அவன். எப்படியும் கெமிஸ்ட்ரி க்ரூப்புக்கு மாறிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

அடுத்த நாள் பெற்றோரிடம் தான் கெமிஸ்ட்ரிக்கு மாற்றிக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

"நல்ல க்ரூப்லேர்ந்து ஏன் மாறணுங்கறே"--கேட்ட அப்பாவிடம்,

"அந்த காலேஜ்லே பிஸிக்ஸ்க்கு நல்ல ஆசிரியர் இல்லே. டீச்சிங் சுத்த மோசம். ஆனா...கெமிஸ்ட்ரியிலே ஸ்டேட் ரேங்க், கோல்டு மெடல் எல்லாம் நிறைய வாங்கியிருக்காங்க என்று புளுகினான்.

கெமிஸ்ட்ரி தனக்கு அலர்ஜியாயிற்றே என்று உள்ளூர பயந்தாலும் பிரேமாவின் நினைவுகளே அவனது மூளையைச் சலவை செய்தன.

அடுத்த நான்கு நாட்கள் கல்லூரி அலுவலகத்திற்கு விடாமல் சென்று நச்சரித்துக் கெமிஸ்ட்ரி பிரிவிற்குத் தன்னை மாற்றிக்கொண்டான் வசந்த்.

அன்று சந்தோஷமாகக் கெமிஸ்ட்ரி வகுப்பிற்குள் நுழைந்தவனின் கண்கள் பிரேமாவைத் தேடின. அவள் தென்படாது போகவே விசாரித்தான்.

"அவள் பிஸிக்ஸ் குரூப் வேணும்னு பிரின்ஸிபாலை நச்சரிச்சிட்டு இருந்தாள். ஒரு இடம் இப்பத்தான் காலியாச்சுன்னு அவள் கேட்டிருந்தபடி பிஸிக்ஸ் க்ரூப்புக்கு அவளை மாற்றம் செய்துட்டாங்க" என்று பதில் வந்தது.

(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)