Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, October 10, 2011

வாராயோ தோழி வாராயோ



வாராயோ தோழி வாராயோ - (மெட்டு)

------------------------------------------------

பல்லவி

*********

வாழ்வாய் என் கண்ணே நிடூழி

உனை சூழ இன்பம் பல கோடி

புதுக்காலை புனலில் நீராடி - நீ

புதுக்கோலம் காண்பாய் மலர் சூடி


சரணம்

********

புலராத பொழுது புலரும் - புது

பொலிவோடு வதனம் திகழும்


பனிதூவும் மலர்கள் மலரும் - இவள்

துயில் நீங்கி மெல்ல எழுவாள்.


மணவாளன் செல்ல விடுவானோ

மணப்பெண்ணும் நாணம் விடுவாளோ?


எழுதாதா கவிகள் எழுதும் -

விழிகள் பழகாத கலைகள் பழகும்.


பேசாத மொழிகள் பேசும் - இதழ்கள்

பொல்லாத செயல்கள் புரியும்


விலகாத ஆடை விலகாதோ

விளக்கெல்லாம் விழிகள் மூடாதோ?


சிலிர்க்காத உடலும் சிலிர்க்கும் - முன்பு

துளிர்க்காத இன்பம் துளிர்க்கும்


இடைகூட மெல்ல துவளும் - இன்பம்
இடைவேளை இன்றி தொடரும்,


படைகொண்டு காமன் வருவானோ

பகலான போதும் விடுவானோ ?
000oo 00o00 00o00 oo0oo oo0oo


(பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் "வாராயோ தோழி வாராயோ" பாடல் மெட்டில் எழுதி அனுப்பச் சொன்ன போட்டிக்காக எழுதிய பாட்டு)

Wednesday, September 14, 2011

தவிக்குது மனசு

பல்லவி

தனியா தவிக்குது மனசு
தகறாரு செய்யற வயசு .
வாசமுல்லை சூடிகிட்டு
வாடி என்னை தேடிகிட்டு.




சரணம்


வரப்போரம் நீ நடந்தா - என்
நரம்பெல்லாம் முறுக்கேறும் ,
நாத்து நீ நடும்போது ,
ரத்தம் மெல்ல சூடேறும் !
ராத்திரி நேரம் வந்தா - அந்த
நிலவு என்னை சுட்டெரிக்கும் ,
ஆத்தாடி உன் வனப்பு - அதை
சுத்திவரும் என் நெனப்பு.
பூ வாடை காத்து அடிச்சு - அடி
புண்ணாச்சு என் உடம்பு,
பாவாடை போத்திருக்கும் - என்
போர்வையே நீ வாடி .
கண்ணுக்குள்ளே கள்ளுக்கடை - என்
கண்ணே ஏன் கதவடைப்பு ?
மதுவிலக்கு நேரமில்லே - வீண்
கதவடைப்பு தேவையில்லே.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^