Thursday, November 28, 2013
Thursday, November 21, 2013
Saturday, November 16, 2013
Monday, November 11, 2013
Wednesday, October 30, 2013
Monday, October 28, 2013
Friday, October 25, 2013
Monday, October 21, 2013
Thursday, October 10, 2013
Thursday, October 3, 2013
Wednesday, September 25, 2013
Thursday, September 12, 2013
Sunday, September 8, 2013
Saturday, August 31, 2013
Thursday, August 22, 2013
Tuesday, August 20, 2013
Saturday, August 17, 2013
Thursday, August 8, 2013
Sunday, August 4, 2013
Friday, August 2, 2013
Friday, July 26, 2013
சுற்றுச் சூழல்
நெற்பயிரை விளைச்சிடவே நாத்து வேணும்
நல்ல நாத்து வேணும்.
சுத்தமான மூச்சு விட காத்து வேணும்
நல்ல காத்து வேணும்.
நல்ல காத்து வேணுமுன்னா நல்ல சூழல் வேணும்
சுற்றுச் சூழல் வேணும்.
நல்ல சுற்றுச் சூழலைத்தான் காக்க வேணும்
பாதுகாக்க வேணும்.
அக்கம் பக்கம் தூய்மையா வைக்க வேணும்
தூய்மையா வைக்க வேணும்!
குப்பை கூளம் அண்டாம காக்க வேணும்
நாம காக்க வேணும்.
வீதி சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீடு
சுத்தமாகும் நம்ம வீடு.
ஊரு சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீதி
சுத்தமாகும் வீதி.
வீட்டு குப்பையை வீதியிலே வீசக்கூடாது
நாம வீசக்கூடாது,
அடுத்த வீட்டை குப்பை மேடா ஆக்கக்கூடாது
நாம ஆக்கக்கூடாது!
கண்ட இடத்தில் எல்லாம் நாம துப்பக் கூடாது
எச்சில் துப்பக் கூடாது.
காலையிலே அசுத்தம் எங்கும் செய்யக்கூடாது
அசுத்தம் செய்யக்கூடாது.
பிள்ளைக்கெல்லாம் நாம கத்துக் கொடுக்கோணும்
சுத்தம் கத்துக் கொடுக்கோணும்.
சுத்தம் சோறு போடும்னு சொல்லிக் கொடுக்கோணும்
நாம சொல்லிக் கொடுக்கோணும்.
சுற்றுச் சூழல் பாதுகாத்தா தீங்கு வராது
ஒரு தீங்கு வராது!
வீட்டு நலம் பாதுகாத்தா தீங்கு வராது
உடல் தீங்கு வராது.
நாட்டு நலம் பாதுகாத்தா நோய்கள் வராது
தொற்று நோய்கள் வராது.
ஏட்டுக் கல்வி மட்டும் நம்மை வாழ வைக்காது
நம்மை வாழ வைக்காது.
பசுமரங்களைத்தான் நாம வெட்டக் கூடாது
என்றும் நாம வெட்டக் கூடாது.
மரங்களைத்தான் நட்டு வந்தா வறட்சி வராது
நாட்டில் வறட்சி வராது!
<> <> <> <> <> <> <> <> <> <>
Wednesday, July 17, 2013
Tuesday, July 2, 2013
Monday, June 24, 2013
மழை நீர் சேகரிப்பு
மழை நீர் சேகரிப்பு
================
பல்லவி
=======
தூறல் தூறல் விழுகின்றது -- மழைச்
சாரல் சாரல் தெரிக்கின்றது!
விழுகின்ற நீரைச் சேகரிப்போம்
வாழ்வில் வளங்களைச் சேர்த்திடுவோம்.
சரணம்
======
வீணாய் போகிற மழை நீரை
தேனாய் ஆக்கிட சேகரிப்போம்
கடலில் கலக்கிற மழை நீரை
நிலத்தடி நீராய் மாற்றிடுவோம்
நீரின்றி ஓர் உயிரேது...
நீரில்லாமல் நெற்பயிரேது?
செயற்கை மழையும் தேவையில்லை
செழிப்பாய் நாமும் வாழ்ந்திடலாம்.
நேரம் இன்றி தவிக்கின்றோம் -- குடி
நீருக்கு நாமும் அலைகின்றோம்,
இயற்கை தருகின்ற மழை நீரை
ஏனோ நாமும் தவிர்க்கின்றோம்!
நன்றே நாமும் வாழ்ந்திடவே
நாளைய தேவைக்கு நீர் சேர்ப்போம்,
இன்றே நாமும் மனம் வைப்போம்
நிலத்தடி நீருக்கு வழி செய்வோம்.
இயற்கை தருகின்ற மழை நீரை
இனிதே நாமும் சேர்த்திடலாம்
நிலத்தடி நீரும் இருந்தாலே,
நிம்மதி தானே வாழ்நாளே!
மண்ணின் வளமும் பெருகிடுமே
மரங்களும் செழித்து வளர்ந்திடுமே
மலர்களும் பூத்து குலுங்கிடுமே,
மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்திடுமே!
Tuesday, June 11, 2013
Tuesday, May 21, 2013
Wednesday, May 15, 2013
Friday, April 26, 2013
Sunday, April 21, 2013
Saturday, April 13, 2013
Monday, April 1, 2013
Subscribe to:
Posts (Atom)