Friday, July 26, 2013

சுற்றுச் சூழல்





நெற்பயிரை விளைச்சிடவே நாத்து வேணும் 

நல்ல நாத்து வேணும்.

சுத்தமான மூச்சு விட காத்து வேணும்

நல்ல காத்து வேணும்.

நல்ல காத்து வேணுமுன்னா நல்ல சூழல் வேணும்

சுற்றுச் சூழல் வேணும்.

நல்ல சுற்றுச் சூழலைத்தான் காக்க வேணும்

பாதுகாக்க வேணும்.

அக்கம் பக்கம் தூய்மையா வைக்க வேணும்

தூய்மையா வைக்க வேணும்!


குப்பை கூளம் அண்டாம காக்க வேணும்

நாம காக்க வேணும்.

வீதி சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீடு

சுத்தமாகும் நம்ம வீடு.

ஊரு சுத்தம் இருந்தாத்தான் சுத்தமாகும் வீதி

சுத்தமாகும் வீதி.

வீட்டு குப்பையை வீதியிலே வீசக்கூடாது

நாம வீசக்கூடாது,

அடுத்த வீட்டை குப்பை மேடா ஆக்கக்கூடாது

நாம ஆக்கக்கூடாது!


ண்ட இடத்தில் எல்லாம் நாம துப்பக் கூடாது

எச்சில் துப்பக் கூடாது.

காலையிலே அசுத்தம் எங்கும் செய்யக்கூடாது

அசுத்தம் செய்யக்கூடாது.

பிள்ளைக்கெல்லாம் நாம கத்துக் கொடுக்கோணும்

சுத்தம் கத்துக் கொடுக்கோணும்.

சுத்தம் சோறு போடும்னு சொல்லிக் கொடுக்கோணும்

நாம சொல்லிக் கொடுக்கோணும்.

சுற்றுச் சூழல் பாதுகாத்தா தீங்கு வராது

ஒரு தீங்கு வராது!


வீட்டு நலம் பாதுகாத்தா தீங்கு வராது

உடல் தீங்கு வராது.

நாட்டு நலம் பாதுகாத்தா நோய்கள் வராது

தொற்று நோய்கள் வராது.

ஏட்டுக் கல்வி மட்டும் நம்மை வாழ வைக்காது

நம்மை வாழ வைக்காது.

பசுமரங்களைத்தான் நாம வெட்டக் கூடாது

என்றும் நாம வெட்டக் கூடாது.

மரங்களைத்தான் நட்டு வந்தா வறட்சி வராது

நாட்டில் வறட்சி வராது!

<>     <>   <>   <>   <>   <>   <>   <>  <>  <>




Wednesday, July 17, 2013

அனிதா, ஆஷா, நிம்மி


6.10.94 "குமுதம்" இதழில் வெளியானது

Tuesday, July 2, 2013

வேலைக்கு வரியா?



27.10.94 "குமுதம்" இதழில் வெளியான ஒரு பக்கக் கதை