குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்.
Friday, October 14, 2011
Wednesday, October 12, 2011
மனிதனை தேடுகிறேன்
மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
ஒருவன் முகத்தை மாற்றுகிறான் - பொய்
முகத்தை நாளும் காட்டுகிறான்.
நடிப்பதை நிறுத்தி நல்வழியில் - அவன்
படித்ததை நெஞ்சில் புகுத்திவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன்
பூக்கள் வண்ணத்தை மாற்றவில்லை - தன்
வாசத்தில் வேஷத்தை சேர்க்கவில்லை
பூக்களைப்போல் மனம் திறந்துகொண்டு - நல்ல
பாக்களைப்போல் சொல் வழங்கிவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன் -
அறம் படைத்தான் , ஆண்டவன் படைத்தான்
மறை படைத்து பல மதம் படைத்தான்.
பிறரையும் தன்போல் மதித்துவிடும் - அந்த
மனம் படைத்த நல்ல குணம் படைத்த
மனிதனை இங்கே தேடுகிறேன்
விழிகளை மறைத்து இருட்டு என்றான்
திசைகளை திருப்பி வழி என்றான்
இதயத்தை காட்டி அழைத்துக் கொள்ளும் - கையில்
இருப்பதை ஊட்டி அணைத்துக் கொள்ளும்
மனிதனை இங்கே தேடுகிறேன் .
மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
மனிதனை இங்கே தேடுகிறேன்Monday, October 10, 2011
வாராயோ தோழி வாராயோ
வாராயோ தோழி வாராயோ - (மெட்டு)
------------------------------------------------
பல்லவி
*********
வாழ்வாய் என் கண்ணே நிடூழி
உனை சூழ இன்பம் பல கோடி
புதுக்காலை புனலில் நீராடி - நீ
புதுக்கோலம் காண்பாய் மலர் சூடி
சரணம்
********
புலராத பொழுது புலரும் - புது
பொலிவோடு வதனம் திகழும்
பனிதூவும் மலர்கள் மலரும் - இவள்
துயில் நீங்கி மெல்ல எழுவாள்.
மணவாளன் செல்ல விடுவானோ
மணப்பெண்ணும் நாணம் விடுவாளோ?
எழுதாதா கவிகள் எழுதும் -
விழிகள் பழகாத கலைகள் பழகும்.
பேசாத மொழிகள் பேசும் - இதழ்கள்
பொல்லாத செயல்கள் புரியும்
விலகாத ஆடை விலகாதோ
விளக்கெல்லாம் விழிகள் மூடாதோ?
சிலிர்க்காத உடலும் சிலிர்க்கும் - முன்பு
துளிர்க்காத இன்பம் துளிர்க்கும்
இடைகூட மெல்ல துவளும் - இன்பம்
இடைவேளை இன்றி தொடரும்,
இடைவேளை இன்றி தொடரும்,
படைகொண்டு காமன் வருவானோ
பகலான போதும் விடுவானோ ?
000oo 00o00 00o00 oo0oo oo0oo
000oo 00o00 00o00 oo0oo oo0oo
(பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் "வாராயோ தோழி வாராயோ" பாடல் மெட்டில் எழுதி அனுப்பச் சொன்ன போட்டிக்காக எழுதிய பாட்டு)
Subscribe to:
Posts (Atom)