Monday, October 10, 2011

வாராயோ தோழி வாராயோ



வாராயோ தோழி வாராயோ - (மெட்டு)

------------------------------------------------

பல்லவி

*********

வாழ்வாய் என் கண்ணே நிடூழி

உனை சூழ இன்பம் பல கோடி

புதுக்காலை புனலில் நீராடி - நீ

புதுக்கோலம் காண்பாய் மலர் சூடி


சரணம்

********

புலராத பொழுது புலரும் - புது

பொலிவோடு வதனம் திகழும்


பனிதூவும் மலர்கள் மலரும் - இவள்

துயில் நீங்கி மெல்ல எழுவாள்.


மணவாளன் செல்ல விடுவானோ

மணப்பெண்ணும் நாணம் விடுவாளோ?


எழுதாதா கவிகள் எழுதும் -

விழிகள் பழகாத கலைகள் பழகும்.


பேசாத மொழிகள் பேசும் - இதழ்கள்

பொல்லாத செயல்கள் புரியும்


விலகாத ஆடை விலகாதோ

விளக்கெல்லாம் விழிகள் மூடாதோ?


சிலிர்க்காத உடலும் சிலிர்க்கும் - முன்பு

துளிர்க்காத இன்பம் துளிர்க்கும்


இடைகூட மெல்ல துவளும் - இன்பம்
இடைவேளை இன்றி தொடரும்,


படைகொண்டு காமன் வருவானோ

பகலான போதும் விடுவானோ ?
000oo 00o00 00o00 oo0oo oo0oo


(பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் "வாராயோ தோழி வாராயோ" பாடல் மெட்டில் எழுதி அனுப்பச் சொன்ன போட்டிக்காக எழுதிய பாட்டு)

2 comments:

Rekha raghavan said...

அந்த பாட்டு வரிகளுடன் கன கச்சிதமாக பொருந்துவதும் அர்த்தமுள்ள வார்த்தைகளும் பலே பலே!

வெங்கட் நாகராஜ் said...

பாட்டின் வரிகள் அர்த்தம் பொதிந்து இருக்கிறது. வாராயோ தோழி வாராயோ பாடலின் மெட்டுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது... பாராட்டுகள்...