Wednesday, September 14, 2011

தவிக்குது மனசு

பல்லவி

தனியா தவிக்குது மனசு
தகறாரு செய்யற வயசு .
வாசமுல்லை சூடிகிட்டு
வாடி என்னை தேடிகிட்டு.




சரணம்


வரப்போரம் நீ நடந்தா - என்
நரம்பெல்லாம் முறுக்கேறும் ,
நாத்து நீ நடும்போது ,
ரத்தம் மெல்ல சூடேறும் !
ராத்திரி நேரம் வந்தா - அந்த
நிலவு என்னை சுட்டெரிக்கும் ,
ஆத்தாடி உன் வனப்பு - அதை
சுத்திவரும் என் நெனப்பு.
பூ வாடை காத்து அடிச்சு - அடி
புண்ணாச்சு என் உடம்பு,
பாவாடை போத்திருக்கும் - என்
போர்வையே நீ வாடி .
கண்ணுக்குள்ளே கள்ளுக்கடை - என்
கண்ணே ஏன் கதவடைப்பு ?
மதுவிலக்கு நேரமில்லே - வீண்
கதவடைப்பு தேவையில்லே.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments: