Thursday, December 29, 2011
Monday, December 26, 2011
Thursday, December 22, 2011
Monday, December 19, 2011
Monday, December 12, 2011
Thursday, December 8, 2011
Monday, November 21, 2011
தேர்தல்
கையிலே வச்ச நோட்டு
கால் வயிறு காணலையே ,
விரலிலே வச்ச பொட்டு
நிறமின்னும் மாறலையே !
தினந்தோறும் கும்பிட்டவங்க
திரும்பித்தான் பார்க்கலையே ,
தெருதோறும் வந்தவங்க
தென்படவே இல்லீங்களே !
தேர்தல் முடிஞ்சதுங்க
தெரு முழக்கம் நின்னதுங்க
ஊர்வலம் முடிஞ்சதுங்க
ஊரும் ஆடி ஓஞ்சதுங்க !
இனி வாக்கு கேட்டவங்க
போக்கு காட்டுவாங்க
நோட்டு கொடுத்தவங்க
நிறையத்தான் சேமிப்பாங்க
நாளும் பார்த்ததுதான்
நாளைக்கும் பார்த்திடலாம் ,
அடுத்த தேர்தலப்போ ...
அவங்களையும் பார்த்திடலாம் !
ஏழைங்க குறைதீர்க்க
எவருக்கும் அக்கறை இல்லே
ஏழைமையை போக்கத்தான்
யாருக்கும் மனமேயில்லே !
வானிருக்கு ... வயலிருக்கு
வாழரெண்டு கையிருக்கு,
போனது போகட்டும்பா...
பொழப்ப பாருங்கப்பா !
ooOoo
Thursday, November 3, 2011
என் முகமே எனக்கென்றும் வேண்டும்
என் முகமே எனக்கென்றும் போதும் - இனி
எனக்காக நான் வாழ வேண்டும் !
செய்திட்ட சேவை எல்லாம் போதும்- இனி
செத்திடும் வரை தனிமை வேண்டும் !
நட்பென்று வந்ததெல்லாம் போதும் - இனி
நடந்திட என் கால் மட்டும் போதும் !
ஊர் படித்த வாழ்த்துகள் போதும் - இனி
உருப்படியாய் என்னை விட வேண்டும் !
எனை வந்து பலர் பார்த்தது போதும் - இனி
எனையே நான் பார்த்திடவும் வேண்டும் !
தலையாட்டி நான் இளித்தது போதும் - இனி
தனிமையில் நான் சிந்திக்க வேண்டும் !
போலித்தன சிரிப்பொலிகள் போதும் - இனி
பனிமலர்கள் சிரிப்பொன்றே வேண்டும் !
நாள்தோறும் ஆர்பாட்டம் போதும் - இனி
நான் போக பாலைவனம் வேண்டும் !
உறவென்று எனை கொன்றது போதும் - இனி
உட்கார ஒரு சிறையே வேண்டும் !
சூடான போர்வை எல்லாம் போதும் - இனி
சூரியனின் சூடொன்றே வேண்டும் !
நான்கண்ட பொய் முகங்கள் போதும் - இனி
என் முகமே எனக்கென்றும் வேண்டும்
Friday, October 14, 2011
Wednesday, October 12, 2011
மனிதனை தேடுகிறேன்

மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
ஒருவன் முகத்தை மாற்றுகிறான் - பொய்
முகத்தை நாளும் காட்டுகிறான்.
நடிப்பதை நிறுத்தி நல்வழியில் - அவன்
படித்ததை நெஞ்சில் புகுத்திவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன்
பூக்கள் வண்ணத்தை மாற்றவில்லை - தன்
வாசத்தில் வேஷத்தை சேர்க்கவில்லை
பூக்களைப்போல் மனம் திறந்துகொண்டு - நல்ல
பாக்களைப்போல் சொல் வழங்கிவிடும்
மனிதனை இங்கே தேடுகிறேன் -
அறம் படைத்தான் , ஆண்டவன் படைத்தான்
மறை படைத்து பல மதம் படைத்தான்.
பிறரையும் தன்போல் மதித்துவிடும் - அந்த
மனம் படைத்த நல்ல குணம் படைத்த
மனிதனை இங்கே தேடுகிறேன்
விழிகளை மறைத்து இருட்டு என்றான்
திசைகளை திருப்பி வழி என்றான்
இதயத்தை காட்டி அழைத்துக் கொள்ளும் - கையில்
இருப்பதை ஊட்டி அணைத்துக் கொள்ளும்
மனிதனை இங்கே தேடுகிறேன் .
மனிதனை இங்கே தேடுகிறேன் - ஒரு
மனிதனை இங்கே தேடுகிறேன்Monday, October 10, 2011
வாராயோ தோழி வாராயோ

வாராயோ தோழி வாராயோ - (மெட்டு)
------------------------------------------------
பல்லவி
*********
வாழ்வாய் என் கண்ணே நிடூழி
உனை சூழ இன்பம் பல கோடி
புதுக்காலை புனலில் நீராடி - நீ
புதுக்கோலம் காண்பாய் மலர் சூடி
சரணம்
********
புலராத பொழுது புலரும் - புது
பொலிவோடு வதனம் திகழும்
பனிதூவும் மலர்கள் மலரும் - இவள்
துயில் நீங்கி மெல்ல எழுவாள்.
மணவாளன் செல்ல விடுவானோ
மணப்பெண்ணும் நாணம் விடுவாளோ?
எழுதாதா கவிகள் எழுதும் -
விழிகள் பழகாத கலைகள் பழகும்.
பேசாத மொழிகள் பேசும் - இதழ்கள்
பொல்லாத செயல்கள் புரியும்
விலகாத ஆடை விலகாதோ
விளக்கெல்லாம் விழிகள் மூடாதோ?
சிலிர்க்காத உடலும் சிலிர்க்கும் - முன்பு
துளிர்க்காத இன்பம் துளிர்க்கும்
இடைகூட மெல்ல துவளும் - இன்பம்
இடைவேளை இன்றி தொடரும்,
இடைவேளை இன்றி தொடரும்,
படைகொண்டு காமன் வருவானோ
பகலான போதும் விடுவானோ ?
000oo 00o00 00o00 oo0oo oo0oo
000oo 00o00 00o00 oo0oo oo0oo
(பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் "வாராயோ தோழி வாராயோ" பாடல் மெட்டில் எழுதி அனுப்பச் சொன்ன போட்டிக்காக எழுதிய பாட்டு)
Wednesday, September 14, 2011
தவிக்குது மனசு

தனியா தவிக்குது மனசு
தகறாரு செய்யற வயசு .
வாசமுல்லை சூடிகிட்டு
வாடி என்னை தேடிகிட்டு.
சரணம்
வரப்போரம் நீ நடந்தா - என்
நரம்பெல்லாம் முறுக்கேறும் ,
நாத்து நீ நடும்போது ,
ரத்தம் மெல்ல சூடேறும் !
ராத்திரி நேரம் வந்தா - அந்த
நிலவு என்னை சுட்டெரிக்கும் ,
ஆத்தாடி உன் வனப்பு - அதை
சுத்திவரும் என் நெனப்பு.
பூ வாடை காத்து அடிச்சு - அடி
புண்ணாச்சு என் உடம்பு,
பாவாடை போத்திருக்கும் - என்
போர்வையே நீ வாடி .
கண்ணுக்குள்ளே கள்ளுக்கடை - என்
கண்ணே ஏன் கதவடைப்பு ?
மதுவிலக்கு நேரமில்லே - வீண்
கதவடைப்பு தேவையில்லே.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Saturday, September 10, 2011
சுமைகள்
பிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு ,
போகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு
தத்தி தத்தி நடக்கையிலே என்னென்ன சுகங்கள் ,
தள்ளாடி போகையிலே எத்தனையோ சுமைகள்.
பள்ளிக்கு போகையிலே பாடங்களை சுமந்தேன்
படித்து முடிக்கையிலே பட்டங்களை சுமந்தேன் ,
பருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன் ,
பாவையரை காண்கையிலே கற்பனைகள் சுமந்தேன்
வேலைஒன்று தேடும்போது விரக்தியினை சுமந்தேன்
வேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்
ஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்
ஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்
பெற்றபிள்ளை வளர்ந்திடவே தியாகங்களை சுமந்தேன்,
வளர்ந்தபிள்ளை விட்டு ஓடும்போது வேதனைகள் சுமந்தேன்
சொந்தமென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்
அவர் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்.
முதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்
மூச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்
உடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்,
உயிர்போகும் நேரத்திலும் செய்த பாவங்களை சுமந்தேன்.
oo0oo
Thursday, April 21, 2011
புதுச் செருப்பு

'வாசலில் செருப்பு பத்திரமாக இருக்குமா?'
அதே நினைவோடு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான் சேகர். அவன் கண்கள் மணவறையை பார்த்துக்கொண்டிருந்தனவே தவிர நடந்துகொண்டிருந்த சடங்குகளிலோ,ஹோமத்தை வலம் வந்துகொண்டிருந்த மணமக்கள் மீதோ அவன் கவனம் இல்லை.
புத்தம் புது செருப்பே அவனது சிந்தனையை முழுதும் ஆக்ரமித்திருந்தது.
தாம்பூலப் பைகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா? எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று வாசலைப் பார்த்தான். இன்னும் இல்லை.
நீட்டப்பட்ட தாம்பாளத்திலிருந்து அவன் கை அனிச்சையாக அட்சதையை எடுத்தது.
'கெட்டி மேளம்...கெட்டி மேளம்' என்று குரல் வரவே வாசல்பக்கம் விழி வைத்தபடி அட்சதையை வீசினான்.
அப்பா... புறப்படலாம் என்னும்போது ஒருவர் அப்படியே வழி மறித்து சாப்பாட்டிற்கு அனுப்பினார். நழுவ முடியாமல் சாப்பிடச் சென்றான்.
இலையில் என்ன பரிமாறப்பட்டது என்கிற உணர்வேயின்றி புதுச் செருப்பு நினைவாகவே சாப்பிட்டு முடித்தான்.
அவசர அவசரமாக தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
'புதுச் செருப்பைக் காணோம்!'
'ச்...சீ...பயந்தது போலவே நடந்துவிட்டதே! அதற்குள்ளாக செருப்பை மாட்டிக்கொண்டு போய்விட்டானே!'
ஏமாற்றத்தோடு தான் விட்டுச் சென்ற தன்னுடைய பழைய செருப்பையே மாட்டிக்கொண்டு வெளியேறினான் சேகர்.
அதே நினைவோடு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான் சேகர். அவன் கண்கள் மணவறையை பார்த்துக்கொண்டிருந்தனவே தவிர நடந்துகொண்டிருந்த சடங்குகளிலோ,ஹோமத்தை வலம் வந்துகொண்டிருந்த மணமக்கள் மீதோ அவன் கவனம் இல்லை.
புத்தம் புது செருப்பே அவனது சிந்தனையை முழுதும் ஆக்ரமித்திருந்தது.
தாம்பூலப் பைகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா? எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று வாசலைப் பார்த்தான். இன்னும் இல்லை.
நீட்டப்பட்ட தாம்பாளத்திலிருந்து அவன் கை அனிச்சையாக அட்சதையை எடுத்தது.
'கெட்டி மேளம்...கெட்டி மேளம்' என்று குரல் வரவே வாசல்பக்கம் விழி வைத்தபடி அட்சதையை வீசினான்.
அப்பா... புறப்படலாம் என்னும்போது ஒருவர் அப்படியே வழி மறித்து சாப்பாட்டிற்கு அனுப்பினார். நழுவ முடியாமல் சாப்பிடச் சென்றான்.
இலையில் என்ன பரிமாறப்பட்டது என்கிற உணர்வேயின்றி புதுச் செருப்பு நினைவாகவே சாப்பிட்டு முடித்தான்.
அவசர அவசரமாக தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
'புதுச் செருப்பைக் காணோம்!'
'ச்...சீ...பயந்தது போலவே நடந்துவிட்டதே! அதற்குள்ளாக செருப்பை மாட்டிக்கொண்டு போய்விட்டானே!'
ஏமாற்றத்தோடு தான் விட்டுச் சென்ற தன்னுடைய பழைய செருப்பையே மாட்டிக்கொண்டு வெளியேறினான் சேகர்.
(தமிழ் அரசி 5 .7.92 இதழில் வெளியான என் சிறுகதை)
Monday, January 24, 2011
படம் ஊத்திக்கிச்சா? ரொம்ப சந்தோஷம்!
அன்று அந்த இரண்டு புதுப் படங்கள் ரிலீஸாயின. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.
ஒன்று ஸ்டண்ட் மன்னன் ரத்னகுமார் நடித்தது. மற்றொன்று இளமை இளவரசன் அருண்கபூர் நடித்தது.
சாயங்காலம்.
ரத்னகுமார் வீட்டில் ஒரு குழு.
"அண்ணே, அருண் ஒழிஞ்சான் "இன்னையோட" - படம் டப்பாவாம்."
"அப்படியா?" ரத்னகுமார் சந்தோஷப்பட்டான்.
"பின்னே என்னாண்ணே, பாட்டெல்லாம் பூட்டுது, டான்ஸ் கூட எடுபடலையாம்."
"அடப் பாவமே! அப்ப ஓடாதா?'
"எங்கேர்ந்து ஓடறது? 'ஏ' சென்டர்லே ஒரு வாரம் போவுமாம். பி., சி. எல்லாம் அம்பேல்"
"அப்ப...பட்டாசு கொளுத்துங்க...ஸ்வீட் சாப்பிடுங்க!"
அதே சமயம் அருண்கபூர் வீட்டில்--
"ரத்னத்தோட படம் பொழச்சுக்குமாடா?"
"எங்க தலைவா, சுத்தமா ஊத்திகிச்சு, ஸ்டண்ட் எதுவும் எடுபடலையாம். அப்ப அவுட்தானே?"
"நாலு வாரமாவது போவுமாமா?"
"நாலு வாரமா?, நாலு நாள் ஓடுமான்னு கேளுங்க. கதையே அம்பேல்...இதோட ரத்னகுமார் கதை குளோஸ்!"
"அப்படியா! பட்டாசு வெடிச்சு ஸ்வீட் சாப்பிடுங்க."
மறுநாள்.
ரத்னகுமாரும் அருண்கபூரும் ஒரு நடிகையின் திருமண விழாவில் சந்தித்துக் கொண்டார்கள்.
"ஹலோ அருண், படம் நல்லா வந்திருக்காமே? வாழ்த்துக்கள்!"
"விஷ் யூ த சேம் ரத்னம். நீங்க நல்லா செய்திருக்கீங்கன்னு சொன்னாங்க, வாழ்த்துக்கள்."
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். கேமராக்கள் பளிச்சிட்டன.
(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)
ஒன்று ஸ்டண்ட் மன்னன் ரத்னகுமார் நடித்தது. மற்றொன்று இளமை இளவரசன் அருண்கபூர் நடித்தது.
சாயங்காலம்.
ரத்னகுமார் வீட்டில் ஒரு குழு.
"அண்ணே, அருண் ஒழிஞ்சான் "இன்னையோட" - படம் டப்பாவாம்."
"அப்படியா?" ரத்னகுமார் சந்தோஷப்பட்டான்.
"பின்னே என்னாண்ணே, பாட்டெல்லாம் பூட்டுது, டான்ஸ் கூட எடுபடலையாம்."
"அடப் பாவமே! அப்ப ஓடாதா?'
"எங்கேர்ந்து ஓடறது? 'ஏ' சென்டர்லே ஒரு வாரம் போவுமாம். பி., சி. எல்லாம் அம்பேல்"
"அப்ப...பட்டாசு கொளுத்துங்க...ஸ்வீட் சாப்பிடுங்க!"
அதே சமயம் அருண்கபூர் வீட்டில்--
"ரத்னத்தோட படம் பொழச்சுக்குமாடா?"
"எங்க தலைவா, சுத்தமா ஊத்திகிச்சு, ஸ்டண்ட் எதுவும் எடுபடலையாம். அப்ப அவுட்தானே?"
"நாலு வாரமாவது போவுமாமா?"
"நாலு வாரமா?, நாலு நாள் ஓடுமான்னு கேளுங்க. கதையே அம்பேல்...இதோட ரத்னகுமார் கதை குளோஸ்!"
"அப்படியா! பட்டாசு வெடிச்சு ஸ்வீட் சாப்பிடுங்க."
மறுநாள்.
ரத்னகுமாரும் அருண்கபூரும் ஒரு நடிகையின் திருமண விழாவில் சந்தித்துக் கொண்டார்கள்.
"ஹலோ அருண், படம் நல்லா வந்திருக்காமே? வாழ்த்துக்கள்!"
"விஷ் யூ த சேம் ரத்னம். நீங்க நல்லா செய்திருக்கீங்கன்னு சொன்னாங்க, வாழ்த்துக்கள்."
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். கேமராக்கள் பளிச்சிட்டன.
(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)
Subscribe to:
Posts (Atom)